Sunday, February 10, 2019

மகத்துவம் நிறைந்த வெள்ளைப்பூண்டு!

பூண்டு, வெள்ளைப்பூண்டு, பூடு, உள்ளி என அழைக்கப்படும் பூண்டு பருவகால தாவரமாகும். பழங்காலத்திலிருந்தே சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். 

* பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது.

* வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும்.

* நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது.

* வாய்வுக்கோளாறினால் சிலருக்கு முதுகுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, கை-கால் வீக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படக்கூடும். அப்போது, வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு அதன் தோலை உரித்து பூண்டை மட்டும் சாப்பிடுவதால் மேலே சொன்ன கோளாறுகள் எல்லாம் சரியாகும்.
#doctorvikatan #விகடன்

No comments:

Post a Comment

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...