"சிலர் மரணித்தவிடுவார்கள் ஆனால் அவர்கள் மனிதர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்" ஆலிமுல் குறைஷ் இமாம் முஹம்மத் இத்ரீஸ் ஷாபி றஹிமஹூல்லாஹ்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார். இலங்கையின் அன்றைய ஆளுனர் Sir வில்லியம் ஹென்றி மன்னிங் அவர்கள் you have done a valuable work என்று பாராட்டினார்.
என் டீ எச் அப்துல் கபூர் இலங்கை வரலாற்றில் கல்வித்துறைக்கு மகத்தான சேவையை நிறைவேற்றியவராவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவை சொந்த செலவில் நிர்மாணித்தார். மேலதிகமாக பதினாறு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். ஹாஹிரா கல்லூரியின் விடுதியை Hostel நிர்மாணிக்க அன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார். ஸாஹிராக் கல்லூரிக்கு ஸதகதுல் ஜாரியாவாக தனது 14ஏக்கர் ரப்பர் தோட்டத்தை (Rubber estate) வக்ப் செய்தார். அவரது நினைவாகவே ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபம் அமைககப்பட்டுள்ளது.
ரத்மலானையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (கண் மற்றும் செவிப்புலன் அற்ற) பாடசாலையை தனது காணியில் சொந்தச் செலவில் நிர்மாணிதார்.
நாட்டில் புகழ்பூத்த ஆலிம்களை உருவாக்கிய மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியை நிர்மாணித்து தீன் பணி செய்தார். அல்குர்ஆனை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துல ஸமது ஸாஹிப் அவர்களின் தந்தை கண்ணியத்திற்குரிய அப்துல் ஹமீத் பாகவி ஹஸ்ரத் உட்பட பல அறிஞர்களை வரவழைத்து கபூரியாவை நெறிப்படுந்தினார்கள். கபூரியாவுக்கு என 40 ஏக்கர் விசாலமான ரப்பர் காணியை (Rubber estate) வக்ப் செய்தார்கள். 1971ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் இந்தக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு தற்சமயம் பத்து ஏக்கர் காணி மாத்திரமே கபூரியாவுக்குச் சொந்தமாகக் காணப்படுகிறது.
1905ம் ஆண்டில் தொப்பி அணி அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று உத்தரவை எதிர்த்து 1905ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி் அறிஞர ஏம் எம் ஏ அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்க போராடும் நோக்கில் "துருக்கித் தொப்பி போராட்டக் குழு" என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்கள். இதில் என் டி எச் அப்துல் கபூர் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்து போராடினார் . இறுதியில் நீதிமன்றத்தில் தொப்பியுடன் வாதட முடியும் என்று அனுமதி கிடைத்தது.
என் டி எச் அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ்வுக்காக செய்தது என்று திருப்தியடைந்துகொள்வார்கள்.
என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள் பற்றி இலங்கையின் முன்னாள் பிரதமர்
S W R D பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.
Though he is perhaps best remembered for the contribution to the cause of Muslim education and religion, his generosity was not limited to the Muslim community alone. I regard him as one of the outstanding Ceylonese gentlemen of his age and appreciate this opportunity of paying this tribute to him". - S.W.R.D. Bandaranaike
ஆக்கம்
பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார். இலங்கையின் அன்றைய ஆளுனர் Sir வில்லியம் ஹென்றி மன்னிங் அவர்கள் you have done a valuable work என்று பாராட்டினார்.
என் டீ எச் அப்துல் கபூர் இலங்கை வரலாற்றில் கல்வித்துறைக்கு மகத்தான சேவையை நிறைவேற்றியவராவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவை சொந்த செலவில் நிர்மாணித்தார். மேலதிகமாக பதினாறு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். ஹாஹிரா கல்லூரியின் விடுதியை Hostel நிர்மாணிக்க அன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார். ஸாஹிராக் கல்லூரிக்கு ஸதகதுல் ஜாரியாவாக தனது 14ஏக்கர் ரப்பர் தோட்டத்தை (Rubber estate) வக்ப் செய்தார். அவரது நினைவாகவே ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபம் அமைககப்பட்டுள்ளது.
ரத்மலானையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (கண் மற்றும் செவிப்புலன் அற்ற) பாடசாலையை தனது காணியில் சொந்தச் செலவில் நிர்மாணிதார்.
நாட்டில் புகழ்பூத்த ஆலிம்களை உருவாக்கிய மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியை நிர்மாணித்து தீன் பணி செய்தார். அல்குர்ஆனை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துல ஸமது ஸாஹிப் அவர்களின் தந்தை கண்ணியத்திற்குரிய அப்துல் ஹமீத் பாகவி ஹஸ்ரத் உட்பட பல அறிஞர்களை வரவழைத்து கபூரியாவை நெறிப்படுந்தினார்கள். கபூரியாவுக்கு என 40 ஏக்கர் விசாலமான ரப்பர் காணியை (Rubber estate) வக்ப் செய்தார்கள். 1971ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் இந்தக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு தற்சமயம் பத்து ஏக்கர் காணி மாத்திரமே கபூரியாவுக்குச் சொந்தமாகக் காணப்படுகிறது.
1905ம் ஆண்டில் தொப்பி அணி அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று உத்தரவை எதிர்த்து 1905ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி் அறிஞர ஏம் எம் ஏ அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்க போராடும் நோக்கில் "துருக்கித் தொப்பி போராட்டக் குழு" என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்கள். இதில் என் டி எச் அப்துல் கபூர் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்து போராடினார் . இறுதியில் நீதிமன்றத்தில் தொப்பியுடன் வாதட முடியும் என்று அனுமதி கிடைத்தது.
என் டி எச் அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ்வுக்காக செய்தது என்று திருப்தியடைந்துகொள்வார்கள்
என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள் பற்றி இலங்கையின் முன்னாள் பிரதமர்
S W R D பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.
Though he is perhaps best remembered for the contribution to the cause of Muslim education and religion, his generosity was not limited to the Muslim community alone. I regard him as one of the outstanding Ceylonese gentlemen of his age and appreciate this opportunity of paying this tribute to him". - S.W.R.D. Bandaranaike
ஆக்கம்
பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
No comments:
Post a Comment